கேரள மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கல்வி அறிவு பெறாத ஒரு லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த
30 ஆண்டுகளில், 2016 முதல் 2020ம்
ஆண்டுவரை தான்
பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள்
அதிகமாக கல்வியறிவு பெற்றுள்ளனர் என்று
கேரள
அரசு
தெரிவித்துள்ளது.
பழங்குடியின மக்கள்
தவிர்த்து, மீனவ
மக்கள்,
புலம்பெயர்ந்து கேரளாவுக்கு வந்த
தொழிலாளர்கள் ஆகியோருக்கும் எழுத்தறிவிக்கப்பட்டுள்ளது. இதில்
பலர்
தங்கள்
கல்வியைப் பாதியிலேயே நிறுத்தியிருந்தனர், அவர்களும் கல்வியைத் தொடரவும் வாய்ப்பும், வசதியும் வழங்கப்பட்டது.
கேரள
அரசின்
மாநிலக் கல்வித்துறையின் கீழ்
செயல்படும் சுயேட்சை அமைப்பான கேரள
எழுத்தறிவு இயக்க
ஆணையம்(கேஎஸ்எல்எம்ஏ) பல்வேறு எழுத்தறிவு திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறது.
கேரள
எழுத்தறிவு ஆணையத்தின் திட்டத்தின் மூலம்
ஒட்டுமொத்தமாகப் பெண்கள் உள்பட
ஒரு
லட்சத்து 35 ஆயிரத்து 608 பேர்
கல்வியறிவு பெற்றுள்ளனர். இதில்
4-ம்
வகுப்பு வரை
24,148 பேரும்,
7-ம்
வகுப்புவரை 21,950 பேரும், 10ம்
வகுப்பு வரை
64,663 பேரும்,
12-ம்
வகுப்பு வரை
24,847 பேரும்
கல்வி
கற்றுள்ளனர்.
கடந்த
2011 முதல்
2015-ம்
ஆண்டுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
ஜனநாயக
முன்னணி அரசு
ஆட்சியில் மொத்தமாக 4 ஆயிரத்து 600 பேர்
மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர். ஆனால்,
ஐக்கிய
இடது
ஜனநாயக
அரசின்
கீழ்
1.38 லட்சம்
பேர்
புதிதாக எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
இதுகுறித்து கேரள
எழுத்தறிவு ஆணையத்தின் மூத்த
அதிகாரி ஒருவர்
கூறுகையில் " கடந்த 1990களில்
எழுத்தறிவு இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த
நேரத்தில் கேரள
அரசு
தொடக்கநிலைக் கல்விக்கே அதிகமான முக்கியத்துவம் அளித்து, கல்வியறிவு இல்லாத
சூழலைக் கொண்டுவர முயன்றது. ஆனால்,கடந்த 4 ஆண்டுகளாக இடதுசாரி அரசுதான் ஒட்டுமொத்த கல்விக்கான முக்கியத்துவத்தை அளித்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
கேரள
அரசின்
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள்படி, 2011-ம் ஆண்டு
கணக்கின்படி மாநிலத்தில் 18 லட்சம்
பேர்
கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
கேரளாவில் 4-ம்
வகுப்பு தேறிய
105 வயது
மூதாட்டி பகீரதிஅம்மாளுடன் ஸ்ரீகலா